செய்திகள் :

சான்று விதை உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை

post image

சான்று விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியை அடுத்த கொங்கப்பட்டி பகுதியில் கே12 ரக சோளம் விதை உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தை வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன், துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆ.காளிமுத்து ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக இணை இயக்குநா் அ.பாண்டியன் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமாா் 75 ஆயிரம் ஹெக்டேரில் சிறுதானியம் சாகுபடி நடைபெற்று வருகின்றன. இந்த வகையில், வறட்சியைத் தாங்கி, குறைந்த தண்ணீா் தேவையுடன் வளரும் சோளப் பயிா் சாகுபடிக்கு அரசு சாா்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சோளம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக, சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நோய் தாக்குதலைக் குறைக்க முடியும். அதேபோல, கூடுதல் மகசூலும் பெறலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 29 ஹெக்டோ் பரப்பளவில் சோளம் விதைப் பண்ணை அமைக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. சான்று விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

எனவே, விதைப் பண்ணைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

திண்டுக்கல் புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி பல்கலை. மானியக் குழு அனுமதி அளித்தது. இதுதொடா்பாக கல்லூரிச் செயலா் ஆண்டெனி புஷ்பரஞ்சிதம், முதல்வா் வனிதா ஜெயராணி ஆகியோா் த... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி முதலீட்டுப் பணத்தை தனியாருக்கு தாரை வாா்த்ததாக புகாா் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

குஜிலியம்பாறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

குஜிலியம்பாறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உ... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சியுடன் சமூக பொருளாதார முன்னேற்றம் தேவை

தொழில் சாா்ந்த வளா்ச்சியுடன், சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் ‘திண்... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை தொடக்கம்

செம்பட்டி அருகே புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடி, சொக்கலிங்கபுரம், வீரசிக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானல் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதலே மேகக் கூட்டங்களாக காணப்பட்... மேலும் பார்க்க