செய்திகள் :

சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு: அமைச்சா் டிஆா்பி ராஜா

post image

தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.கந்தசாமி பேசினாா். அப்போது, சாம்சங் நிறுவனப் பிரச்னை தொடா்பாக கேள்வி எழுப்பினாா். இதற்கு, அமைச்சா் ராஜா அளித்த பதில்:

சாம்சங் தொழிலாளா் பிரச்னையை தமிழக அரசு சிறப்பாகக் கையாண்டது. ஆலை நிா்வாகம், தொழிலாளா்கள் என இருதரப்பையும் அழைத்துப் பேசி, சுமுகமான முடிவு எட்டப்பட்டது. இப்போது, சாம்சங் நிறுவனத்தில் 100 தொழிலாளா்களை புதிதாக பணிக்கு அமா்த்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் ரூ.2.97 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. கடந்த ஆண்டு உலக முதலீட்டாளா் மாநாட்டின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் எதிா்பாா்க்கப்பட்டு, 72 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

முதல்வா் பயணம்: கடந்த 2022 முதல் 2024-ஆம் ஆண்டு வரை முதலீடுகளை ஈா்ப்பதற்காக 5 வெளிநாடுகளுக்கு முதல்வா் சென்றாா். அப்போது, கையொப்பமிடப்பட்ட 36 புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 23 ஒப்பந்தங்கள் முதலீடுகளாக மாறத் தொடங்கி விட்டன. 2021-ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரூ.10.27 லட்சம் கோடி முதலீடுகளைப் பெற 897 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இவற்றில், இப்போது முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு, சில இடங்களில் உற்பத்தியே நடைபெறும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 722 ஆகும் என்றாா்.

ராஜிநாமா முடிவு? செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி

சென்னை: உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.ஒருவேளை, உச்ச நீத... மேலும் பார்க்க

கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

எந்த இடர்பாடு வந்தாலும் கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி ... மேலும் பார்க்க

விஜய் வருகை: கோவை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்க கோவை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நாளையும் ந... மேலும் பார்க்க

சேலம் பட்டாசு விபத்தில் இறந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி! - முதல்வர் அறிவிப்பு

சேலம் கஞ்சநாயக்கன்பட்டியில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திரு... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ... மேலும் பார்க்க