செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ள ரோஹித், கோலி: கௌதம் கம்பீர்

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா

கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக மிக முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

விராட் கோலி, கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக பிசிசிஐ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியின் மதிப்பினை அதிகரிப்பவர்களாக உள்ளனர். அவர்களால் இந்திய கிரிக்கெட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளனர். நான் ஏற்கனவே கூறியது போல, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற வேட்கை அவர்களுக்கு இருக்கிறது என்றார்.

இதையும் படிக்க: ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிய ஐசிசி தலைவர்!

சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வழங்கினார்.51 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள்... மேலும் பார்க்க

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த விருத்திமான் சஹா!

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார்.இந்திய வீரரான விருத்திமான் சஹா, 141 முதல் தர போட்டிகளில் விளையாடி 7,169 ரன்கள் குவித்துள்ளா... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் பெத் மூனி சாதனை மேல் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி சாதனை மேல் சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக நடை... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியா அபாரம்: முதல் முறையாக முழுமையாக வெல்லப்பட்ட மகளிர் ஆஷஸ் தொடர்!

மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்த மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடை... மேலும் பார்க்க

ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா

இந்திய அணியின் வெற்றிக்காக ரன்கள் குவிப்பது மிகவும் சிறப்பான உணர்வைத் தருவதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று (ஜனவரி 31) புண... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நட... மேலும் பார்க்க