செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. நாளை லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன.

இதையும் படிக்க: நியூசி.யைக் காட்டிலும் தென்னாப்பிரிக்கா வலுவாக உள்ளது: ரிக்கி பாண்டிங்

தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க வீரர் அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அணியில் ஆல்ரவுண்டரான ஜியார்ஜ் லிண்டே கூடுதல் வீரராக சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஃபீல்டிங்கின்போது, அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்தப் போட்டியில் அவர் அதன் பின் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாடுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிக்க: இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இறுதிப்போட்டியை துபையில் விளையாடும் சூழல் ஏற்பட்டால், அந்த அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள். அதன் காரணமாகவே, இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜியார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த இந்திய அணி - இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்!

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளை... மேலும் பார்க்க

ஒரே போட்டி.. பல சாதனைகள் படைத்த விராட் கோலி!

ஒரே போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

நியூசி.க்கு எதிரான தொடரில் இவரே தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார்: பாக். கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆக்யூப் ஜாவத் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

336* கேட்சுகள்.. விராட் கோலி புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்து ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டா... மேலும் பார்க்க

முதல் அரையிறுதி: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முத... மேலும் பார்க்க

கையில் கறுப்பு பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி! ஏன்?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிவரும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கறுப்பு பட்டைகளுடன் விளையாடினர்.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுத... மேலும் பார்க்க