சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. நாளை லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன.
இதையும் படிக்க: நியூசி.யைக் காட்டிலும் தென்னாப்பிரிக்கா வலுவாக உள்ளது: ரிக்கி பாண்டிங்
தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், அரையிறுதிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்க வீரர் அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அணியில் ஆல்ரவுண்டரான ஜியார்ஜ் லிண்டே கூடுதல் வீரராக சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஃபீல்டிங்கின்போது, அய்டன் மார்க்ரமுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அந்தப் போட்டியில் அவர் அதன் பின் ஃபீல்டிங்குக்கு வரவில்லை. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாடுவார என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: இந்திய அணிக்கு தலைவலி: காரணம் டிராவிஸ் ஹெட்-‘ஏக்’ -தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?
தென்னாப்பிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இறுதிப்போட்டியை துபையில் விளையாடும் சூழல் ஏற்பட்டால், அந்த அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்படுவார்கள். அதன் காரணமாகவே, இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஜியார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.