செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம்: ஆணையர் சங்கர் வெளியிட்டார்

post image

ஆவடியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுந்தகட்டை காவல் ஆணையர் கி.சங்கர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள நில் கவனி நேசி எனும் விழிப்புணர்வு குறும்படம் அண்மையில் தயாரிக்கப்பட்டது.

இந்த குறும்படம் வெளியீட்டு விழா காவலர் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆணையர் கி.சங்கர் தலைமை வகித்து குறுந்தகட்டை வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பாதுகாப்பான பயணம் மற்றும் வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய முக்கிய சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதிமுறைகள் குறித்த மாணவர்களின் நடன கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து விதிகள் சம்பந்தமான வினாடி, வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற 10 மாணவ- மாணவிகளுக்கு தலா ரூ.1,000 பரிசு தொகையை ஆணையர் வழங்கினார். நிகழ்வில் காவல் கூடுதல் ஆணையர் கே.பவானீஸ்வரி, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தம் உள்பட 1,500 கல்லூரி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ரீல்ஸ்களை தயார் செய்து செவ்வாய்க்கிழமை (செப்.16) முதல் அக். 5ஆம் தேதி வரை பெயர், தொடர்பு எண், சமூக வலைதள முகவரி ஆகியவற்றை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

அதில் சிறந்த விழிப்புணர்வு ரீல்ஸ்களை தேர்வு செய்து, முதல் பரிசாக ரூ.20,000/-, 2-ஆம் பரிசாக ரூ.15,000/-, 3-ஆம் பரிசாக ரூ.10,000/ மற்றும் 20 போட்டியாளர்களுக்கு தலா ரூ.1,000 சிறப்புப் பரிசும், கலந்து கொள்ள அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 94458-25100 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம்.

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மீது தாக்குதல்: வட மாநில ஓட்டுநர் கைது

பூந்தமல்லி அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய வழக்கில் வட மாநில ஓட்டுநரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லியை அருகே நசரத்பேட்டையில் பூந்தமல்லி வட்டாரப் போக்குவரத்து வாகன சோதன... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 ஒடிஸா இளைஞர்கள் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் 3 ஒடிஸா இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். பூந்தமல்லி பகுதியில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்வதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் போலீஸாருக்கு ரகச... மேலும் பார்க்க

6 வாகனங்கள் மீது மோதிய கார்: 2 பேர் உயிரிழப்பு, 3 பேர் காயம்

சென்னை வானகரத்தில் இருந்து திருவேற்காடு வரை சாலையில் செவ்வாய்க்கிழமை சென்ற 6 வாகனங்களை மோதி விட்டு சென்ற கார் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் தாக்கினர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் ... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி அருகே கொண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆா்.கே பேட்டை ஒன்றியம், கொண்டாபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 15,757 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 15,757 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 167.50 கோடி வங்கி கடனுதவிக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் ச... மேலும் பார்க்க

மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா். பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் மின்சாரம் துண்டிக்க... மேலும் பார்க்க