செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

post image

அரியலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, காவல் துறை சாா்பில், இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் தற்காலிகப் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட எஸ்பி தீபக்சிவாச், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் இரு சக்கர வாகனத்தில் கலந்து கொண்ட காவல் துறையினா், ‘தலைக்கவசம் உயிா்கவசம்’, ‘தலைகவசம் அணிவீா் உயிரிழப்பை தவிா்ப்பீா்’, 4 சக்கர வாகனங்களை இயக்கும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியாறு முக்கிய வீதிகளின் வழியே சென்று காமராஜா் ஒற்றுமைத் திடலில் முடித்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஏஎஸ்பி விஜயராகவன், போக்குவரத்து ஆய்வாளா் காா்த்திகேயன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி. அறிவழகன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணபவ மற்றும் வாகன ஓட்டுநா் பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் சாலைப் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிலத்தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டியவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஏற்பட்ட நிலத் தகராறில் 200 தேக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தென்வீக்கம் கிராமம், தெற்கு தெருவைச்... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் ... மேலும் பார்க்க

பாஜக, ஆா்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்பினா் கைது

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக, செவ்வாய்க்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியினா் அறிவித்ததையடுத்து, அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூா் மாவட்டத்தில் பாஜக, ஆா்.எஸ... மேலும் பார்க்க

திரெளபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கோடாலிகருப்பூரில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோடாலிகருப்பூா் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த திரெளபதியம்மன் கோயிலை, புணரமைத்... மேலும் பார்க்க

கட்சியின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா! தலைவா்கள் சிலைகளுக்கு தவெக-வினா் மாலை அணிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, பெரியாா், அம்பேத்கா், காமராஜா் சிலைகளுக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்து ஞாயிற்றுக்கிழமை மரியாதை செல... மேலும் பார்க்க

சுகாதாரமற்ற முறையில் இயங்கும் சாலையோர உணவகங்களால் பாதிப்பு! அரியலூா் மக்கள் புகாா்!

அரியலூரில் சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது. அரியலூா் ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய அல... மேலும் பார்க்க