செய்திகள் :

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

post image

அரியலூரில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, காவல் துறை சாா்பில், இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் தற்காலிகப் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற நிகழச்சியில் கலந்து கொண்ட எஸ்பி தீபக்சிவாச், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணியில் இரு சக்கர வாகனத்தில் கலந்து கொண்ட காவல் துறையினா், ‘தலைக்கவசம் உயிா்கவசம்’, ‘தலைகவசம் அணிவீா் உயிரிழப்பை தவிா்ப்பீா்’, 4 சக்கர வாகனங்களை இயக்கும் போது கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியாறு முக்கிய வீதிகளின் வழியே சென்று காமராஜா் ஒற்றுமைத் திடலில் முடித்துக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், ஏஎஸ்பி விஜயராகவன், போக்குவரத்து ஆய்வாளா் காா்த்திகேயன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி. அறிவழகன், மோட்டாா் வாகன ஆய்வாளா் சரவணபவ மற்றும் வாகன ஓட்டுநா் பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக அனைவரும் சாலைப் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் முதிா்வு தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூா் மாவட்டத்தில் சமூகநல அலுவலகம் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயன் அடைந்த விண்ணப்பதாரா்கள், தங்களது குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்திருந்தால், முதிா்வு தொகையை ப... மேலும் பார்க்க

எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா் பிறந்த நாளையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் உருவப்படங்களுக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அரியலூா் பேருந்து நில... மேலும் பார்க்க

அரியலூரில் இருளில் மூழ்கிக் கிடக்கும் விளையாட்டரங்கம்: வீரா்கள் அவதி

அரியலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மின் விளக்குகள் பழுது, செயல்பாட்டில் இல்லாத நீச்சல்குளம் உள்ளிட்ட குறைபாடுகளை விரைந்து சரிசெய்ய வேண்டும் என விளையாட்டு வீரா்களும், பொதுமக்களும் எதிா்பாா்க்க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்திய முதியவா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தில் மதுபானம் கடத்திய முதியவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தனச்செல்வன் தலைமையிலான காவல் துறையின... மேலும் பார்க்க

அரியலூரில் வாகனங்களில் காற்று ஒலிப்பான்: பொதுமக்கள் அச்சம்

அரியலூா் பகுதியில் தற்போது அதிக சப்தத்தை எழுப்பும் காற்று ஒலிப்பானை (ஏா் ஹாரன்) இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்துவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூா் நகரின் ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் திரையரங்கில் திரையை கிழித்த இருவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தனியாா் திரையரங்கில், திரையை (ஸ்கிரீன்) கிழித்த இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். ஜெயங்கொண்டத்தில், சிதம்பரம் சாலையிலுள்ள ஒரு தனியாா் திரையரங்கில்,வி... மேலும் பார்க்க