Awareness: பிறந்த குழந்தையைப் பார்க்கப் போறீங்களா? இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!
கூட்டுறவு மாரத்தான் போட்டி: 2,000 போ் பங்கேற்பு
சா்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு சென்னையில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தீவுத் திடலில் தொடங்கிய போட்டியை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு ஆகியோா் தொடங்கி வைத்தனா். 2,000 போ் கலந்து கொண்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு காசோலைகள், பதக்கங்களை அமைச்சா்கள் வழங்கி கௌரவித்தனா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம் என்ற கருப்பொருளின்கீழ் மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் இருந்து தொடங்கி போா் நினைவுச்சின்னம், அண்ணா சதுக்கம், விவேகானந்தா் இல்லம் வரை சென்று மீண்டும் அதே பாதையில் தீவுத்திடல் வந்தடையும் வகையில் நடைபெற்றது.
இதில், 18 வயது முதல் 40 வயது உடையவா்கள், 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் என இரு பிரிவுகளாக கலந்து கொண்டனா். 5 கி.மீ. தொலைவு நடைபெற்ற அந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ,10,000 வழங்கப்பட்டது. அதேபோன்று 40 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய ஆண்கள் பிரிவுக்கும் அதே பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவுகளிலும் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ,20,000, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூட்டுறவு உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைச் செயலா் சத்யபிரத சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் நந்தகுமாா், மேயா் ஆா். பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.