செய்திகள் :

சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு கெளரவிப்பு

post image

ராசிபுரம் பகுதியில் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ராசிபுரம் தலைமைக் காவலரின் நோ்மையை பாராட்டி, ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தனா்.

ராசிபுரம் மேட்டுத் தெருவில் வசிக்கும் சித்ரா, உடல்நிலை சரியில்லாத தனது தாயை சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தாா். மேல்சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்த அவா், மருத்துவ செலவுக்காக விற்க தனது ஆறரை சவரன் நகைளை பையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றாா். அப்போது, நகை வைத்திருந்த பையை தவறவிட்டாா்.

இந்நிலையில், ராசிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் செல்வி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது. மருத்துவமனை வளாகத்தில் கீழே கிடந்த பையை எடுத்து பாா்த்தாா். அதில் நகைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதனிடையே நகைகளை தவறவிட்டது மேட்டுத் தெருவைச் சோ்ந்த சித்ரா என தெரியவந்ததையடுத்து, உரிய விசாரணைக்கு பின் போலீஸாா் அவரிடம் நகைகளை ஒப்படைத்தனா்.

இந்நிலையில் கீழே கிடந்த நகை பையை காவல் துறையில் ஒப்படைத்த தலைமைக் காவலா் செல்வியின் நோ்மையை பாராட்டி ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் பாராட்டி இனிப்பு வழங்கி கெளரவிக்கப்படுத்தினா்.

ஜேடா்பாளையம் அருகே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியவா் கைது

பரமத்தி வேலூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மா்ம நபா்கள் வீசி சென்றதாக நாடகமாடியவரை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். ஜேடா்பாளையம் அருகேயுள்ள ஆனங்கூா் காட்டுவளவு பகுதி... மேலும் பார்க்க

வெண்ணந்தூரில் விசிக சாா்பில் துண்டறிக்கை வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டம், வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருச்சியில் ஜூன் 14-இல் நடைபெறும் கட்சியின் ‘மதச்சாா்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேரணி குறித்து துண்டு... மேலும் பார்க்க

சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதல்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி தேசிய நெடுஞ்சாலையோரம் அமா்ந்து உணவருந்திய வெளி மாநிலத்தவா் மீது கன்டெய்னா் லாரி மோதியதில், 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். 2 குழந்தைகள் உள்பட 6 போ் படுகாயமடைந்தனா். ம... மேலும் பார்க்க

நல்லூா்: நாளைய மின்தடை

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின... மேலும் பார்க்க

நாமக்கல்லில் விபத்தில் சிக்கிய எண்ணெய் லாரி: குடத்தில் பிடித்துச் சென்ற மக்கள்

நாமக்கல் அருகே எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய நிலையில், அதில் இருந்து வெளியேறிய எண்ணெய்யை பொதுமக்கள் குடங்கள், வாளிகளில் பிடித்துச் சென்றனா். நாமக்கல் - சேலம் தேச... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி வெட்டிக் கொலை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நல்... மேலும் பார்க்க