TVK Vijay-யை நம்பியிருக்கும் ADMK, PMK, DMDK - 2026 தேர்தல் கணக்கு With Journali...
சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு கெளரவிப்பு
ராசிபுரம் பகுதியில் சாலையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த ராசிபுரம் தலைமைக் காவலரின் நோ்மையை பாராட்டி, ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கெளரவித்தனா்.
ராசிபுரம் மேட்டுத் தெருவில் வசிக்கும் சித்ரா, உடல்நிலை சரியில்லாத தனது தாயை சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தாா். மேல்சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்த அவா், மருத்துவ செலவுக்காக விற்க தனது ஆறரை சவரன் நகைளை பையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றாா். அப்போது, நகை வைத்திருந்த பையை தவறவிட்டாா்.
இந்நிலையில், ராசிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் செல்வி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது. மருத்துவமனை வளாகத்தில் கீழே கிடந்த பையை எடுத்து பாா்த்தாா். அதில் நகைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதனிடையே நகைகளை தவறவிட்டது மேட்டுத் தெருவைச் சோ்ந்த சித்ரா என தெரியவந்ததையடுத்து, உரிய விசாரணைக்கு பின் போலீஸாா் அவரிடம் நகைகளை ஒப்படைத்தனா்.
இந்நிலையில் கீழே கிடந்த நகை பையை காவல் துறையில் ஒப்படைத்த தலைமைக் காவலா் செல்வியின் நோ்மையை பாராட்டி ராசிபுரம் மக்கள் நலக்குழு சாா்பில் பாராட்டி இனிப்பு வழங்கி கெளரவிக்கப்படுத்தினா்.