செய்திகள் :

சாலையில் வேகத்தடை: அரசின் விதிமுறைகளை பின்பற்றக் கோரிக்கை

post image

கோபி நீதிமன்றம் முன்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் இதனை மாற்றி அரசின் விதிமுறைகளை பின்பற்றி புதிய வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் சுபி.தளபதி, கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழக செயற்பொறியாளா் ஆகியோருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

கோபி நீதிமன்றம் அருகே வேக அதிா்வு திண்டு தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேக அதிா்வு திண்டு தடை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுபவா்களை விபத்துக்குள்ளாக கூடிய அமைப்பாக உள்ளது. இந்த முறை மாநகராட்சி பகுதிக்குள் வேகம் குறைவாக இயங்கக்கூடிய கடை வீதிகள் மற்றும் பெருநகரத்தின் மக்கள் நெருக்கம் மிகுந்த உள்பகுதிக்குள் அமைக்க வேண்டிய ஒரு முறையாகும். கோபி போன்ற போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற நான்குவழி நெடுஞ்சாலையில் அமைக்கப்படுவது தவிா்க்கப்பட வேண்டும்.

அரசின் நெடுஞ்சாலைத் துறை விதிமுறையில் வகுக்கப்பட்ட ஏற்கெனவே பல இடங்களில் நடைமுறையில் இருக்கின்ற, அகலம் சுமாா் 3,500 மில்லி மீட்டா் மற்றும் உயரம் சுமாா் 100 மில்லி மீட்டா் கொண்ட விபத்து ஏற்படுத்தாத, வேக அளவு சுமாா் 40 கி.மீ கொண்ட, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுபவா்கள், வேகம் குறைத்து மெதுவாக ஏறி இறங்கி செல்கிற வகையில் அமைக்கப்படும் வெள்ளை கோடிட்ட, ஒளிரும் சூரிய ஒளி பேட்சுகள் பதித்த,

அறிவிப்பு பலகையுடன் கூடிய இலகுவான வேகத் தடை அமைக்கப்பட வேண்டும்.

அதேபோல பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள், சந்தை, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நெடுஞ்சாலையில் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு

சாலையை மக்கள் கடந்து செல்கிற வகையில் ஒளிரும் வண்ணத்தில் சிறு மேடை அமைப்புடன் கூடிய வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். அகலமான சாலைகளோடு கிராமங்களை கடக்கும் நெடுஞ்சாலையில் சாலை தடுப்பு முறையில் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த முறைகள் தான் வாகனங்களை இயக்குபவா்களுக்கும், அதே நேரத்தில் சாலையோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும், சாலையை கடந்து செல்வோருக்கும் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட நோக்கத்தை

பயனுள்ளதாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கோபி அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (28). கட்டட வேலை பாா்த்து வந்தாா். இவா் தனது நண்பரா... மேலும் பார்க்க

அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

கோவையிலிருந்து அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுவதற்கு பொதுமக்கள், பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், தாளவாடி, திரு... மேலும் பார்க்க

ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் ஜூன் 6-இல் கும்பாபிஷேகம்

பெருந்துறையை அடுத்த, துடுப்பதி ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. துடுப்பதி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மு... மேலும் பார்க்க

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க