செய்திகள் :

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

post image

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில்,

பரத்பூரின் ஒரு கடை அருகே சாலையோரத்தில் மூவரின் சடலம் கிடைத்தது. விசாரணையில் இறந்தவர் அனிதா, அவரது 12 வயது மகன், மருமகன் சுபம் என அடையாளம் கணப்பட்டனர்.

கஞ்சோலி கிராமத்தில் உள்ள கடைக்கு வெளியே மூவரும் இறந்து கிடந்தனர். சடலங்களுக்கு அருகில் அடையாளம் தெரியாத பொடி அடங்கிய சந்தேகத்திற்கிடமான பொட்டலம் ஒன்றும், சிதறிக்கிடந்த பொருளின் தடயங்களும் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாள்களாக அவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. அனிதா இரண்டு நாள்களுக்கு முன்பு தனது மகனுடன் கரௌலியில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி, பரத்பூருக்குச் செல்வதாக தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். அவரது கணவர் தேவேந்திரா தற்போது கர்நாடகத்தில் வசிக்கிறார்.

போலீஸார் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்ததை அடுத்து, பெண்ணின் சகோதரர் உடல்களை அடையாளம் கண்டுபிடித்தார். தற்கொலை உள்பட அனைத்து சாத்தியமான கோணங்களிலும் நாங்கள் விசாரித்து வருகிறோம், மேலும் உடல்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட பொடியின் தன்மை குறித்து ஆராயப்படுகிறது என்று அவர் கூறினார், ஆய்வு நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு தடயவியல் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

The bodies of a woman, her minor son and a man were found lying on the roadside near a shop in the Bharatpur district in Rajasthan on Saturday morning, the police said.

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க