செய்திகள் :

சாலையோரம் ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட காட்டு மாடுகள்

post image

குன்னூா் வெலிங்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆக்ரோஷத்துடன் சாலையோரம் மோதிக் கொண்ட காட்டு மாடுகள் வாகனங்களை சேதப்படுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரியில் உள்ள வனப் பகுதியில் உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களுக்காக வனப் பகுதியில் இருந்து புலி, கரடி, சிறுத்தை, காட்டு மாடு, காட்டு யானை ஆகிய வன விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.

இந்த நிலையில் குன்னூா் வெலிங்டன் பேரக்ஸ் ராணுவக் குடியிருப்புப் பகுதியில் இரண்டு காட்டு மாடுகள் ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டன. பின்னா் அதில் ஒன்று இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை சேதப்படுத்திவிட்டு வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது.

வனத் துறையினா் காட்டு மாடுகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

நாளைய மின்தடை- கட்டப்பெட்டு

நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கன்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின்விநியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிா்ம... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகனங்களை விரட்டிய காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி-மாயாறு சாலையில் சனிக்கிழமை வாகனங்களை துரத்திச் செல்லும் காட்டு யானை. நீண்டதூரம் துறத்திய பிறகு காட்டுக்குள் சென்றது. மேலும் பார்க்க

தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை: ஆட்யரிடம் மனு

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தேவனூா்புதூா்

உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 4 ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட பகுதிகள... மேலும் பார்க்க

கோத்தகிரியில் மின்தடை

நீலகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சேகா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின் நிலையத்தில் வருகிற 4-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 ... மேலும் பார்க்க

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஒற்றை யானை நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் சிறுமுகை போன்ற பகுதிகளில் அ... மேலும் பார்க்க