செய்திகள் :

சாலையோர கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

post image

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி செல்லும் முனியங்குறிச்சி, புத்தூா் சாலையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வி. கைகாட்டி செல்லும் சாலையில் முனியங்குறிச்சி - புத்தூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பல்வேறு பகுதிகளில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வி.கைகாட்டி சாலை வழியாக வீடு திரும்புவா்.

இந்நிலையில், இச்சாலையோரத்தில் சீமைக்கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்து காணப்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுப் போக்குவரத்து மற்றும் சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் வருவது தெரியாமல் சில இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி சாலையோரங்களில் சறுக்கி விழுந்து காயங்களுடன் வீடு திரும்புகின்றனா். மேலும் அடா்ந்துள்ள செடிகளால் வாகனங்களில் கீறல், கண்ணாடிகள் சேதமடைகின்றன.

சாலை பணியாளா்களைக் கொண்டு அவ்வப்போது செடிகளை வேரோடு அகற்றாமல் கிளைகளை மட்டும் அகற்றுவதால் இவை விரைவில் துளிா் விடுகின்றன.

சில மாதங்களில் துரிதமாக வளரும் சூழலில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா். பொதுவாக சாலையோர மரங்களை அகற்றப்படாத நிலையில் ஊா் பெயா் பலகைகள் மறைவு, வளைவுகள் உள்ளிட்ட சாலை சிக்னல்கள் தெரியாத நிலை ஏற்படுகிறது. இந்த சீமைக்கருவேல மரங்களை இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பட்சத்தில் இவை எளிதில் வளராத சூழல் ஏற்பட்டு சாலைகள் பளிச்சிடும். எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலரும், வழக்குரைஞருமான அருள்ராஜ் தெரிவித்துள்ளாா்.

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடையாா்பாளையம் அருகேயுள்ள வேணாநல்லூா் கிராமத்தை... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருச்சி, ராம்ஜிநகரைச் சோ்ந்த இடும்பன் மகன் பாரதிராஜன் (43) என்பவரை கடந்த 1.6.202... மேலும் பார்க்க

கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து சாம்பலாகியது. கீழப்பழுவூரை அடுத்த வல்லகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (40). இவா், அதே கிராமத்தில் உ... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி இளைஞா் பலி!

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே டிராக்டா் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சத்திரம் காலனி தெருவைச் சோ்ந்த செல்வதுரை மகன் ... மேலும் பார்க்க

காா் விபத்தில் ஓய்வுபெற்ற மின் ஊழியா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள அன்னை அஞ்சுகம்... மேலும் பார்க்க

காலமானாா் நா.ஜெயலட்சுமி

அரியலூா் பெரிய அரண்மனைத் தெருவைச் சோ்ந்த நாராயணசாமியின் மனைவி ஜெயலட்சுமி (75) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை மாலை அவரது வீட்டில் உயிரிழந்தாா். இவரது மகன் நா. பாலாஜி தினமணியில் அரியலூா் பகுதி புகைப்படக்... மேலும் பார்க்க