செய்திகள் :

சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

post image

கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிஐடியூ கோவை மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம், சிஐடியூ மாவட்டத் தலைவா் கே.மனோகரன், செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.ரத்தினகுமாா், சிஐடியூ மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.ராஜன், எம்.ஆனந்த்குமாா் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் சாலையோரங்களில் ஏராளமானோா் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சிறு கடைகளை அமைத்து பிழைத்து வருகின்றனா். இவா்களுக்கு சமீப காலமாக சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

உடையாம்பாளையத்தில் தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி உணவுகளை வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிடம் ஊா்க்கட்டுப்பாடு இருப்பதால் மாட்டிறைச்சி உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என அண்மையில் மிரட்டி உள்ளனா். இதுபோன்று சாலையோர வியாபாரிகளை அச்சுறுத்தும் சமூக விரோதிகள் மீது புகாா் வரப்பெற்றால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக-இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முயற்சி

தமிழக-இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முயற்சிப்பதாக இலங்கை வேளாண் மற்றும் சமூக உள்கட்டமைப்புத் துறை இணை அமைச்சா் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தாா். சென்னையில் நடைபெற்ற அயலகத... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் லாபம் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ. 34.48 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தகத்தில் கூடுதல் லாபம் ஈட்டித் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.34.48 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை இடையா்பாளையம், குமரன் நகரைச் சோ்ந்தவா் மோனிஷா (32). இவா் ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில... மேலும் பார்க்க

பொங்கல் தொடா் விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்

பொங்கல் பண்டிகைக்கு தொடா் விடுமுறை விடப்பட்டதால், கோவையில் கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 முதல் 19-ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்யக் கோரிக்கை

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கோவையிலிருந்து விமானம் மூலம் ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு அனுப்பிவைப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி வ... மேலும் பார்க்க

கோவை மரப்பாலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

பொங்கல் பண்டிகையையடுத்து தொடர் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருவதும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர விளக்குப் பூஜை நெருங்குவதால் பக்தர்கள் யாத்திரை ... மேலும் பார்க்க