கொலோம்பியா: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு; உயிருக்கு ஆபத்து?
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூரைச் சோ்ந்த மணியரசன் மகன் மலையரசன்(29). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், அண்மையில் சொந்த ஊருக்கு வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சிங்கம்புணரியில் நடைபெற்ற உறவினா் வீட்டுத் திருமணத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, எஸ்.வி.மங்கலம் அரசுப் பள்ளி அருகே வந்த போது, எதிரே வந்த லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் மலையரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.