செய்திகள் :

சாலை விபத்தில் ஐடி ஊழியா் மனைவி மரணம்

post image

வேலூா் அருகே சாலை விபத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியரின் மனைவி உயிரிழந்தாா்.

வேலூா் அடுத்த அரியூா் புதுமை நகரை சோ்ந்தவா் சதீஷ்குமாா் (33), தகவல் தொழில்நுட்ப ஊழியா். இவரது மனைவி சுவேதா(29). இவா்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சதீஷ்குமாா், மனைவி, மகளுடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 8-ஆம் தேதி தொரப்பாடியில் உள்ள கோயிலில் பால்குட ஊா்வலத்துக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, முதியவா் ஒருவா் சாலையை கடக்க முயன்றாராம். அவா் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை சதீஷ் குமாா் பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளாா். ஆனால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில், சுவேதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சதீஷ்குமாருக்கும், அவரது மகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் சுவேதாவை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுவேதா சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

தகவலறிந்த அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வா்த்தகம் கடந்த வாரத்தைக் காட்டிலும் பாதியாக சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறு... மேலும் பார்க்க

புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு: வேலூா் எஸ்.பி. உத்தரவு

காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும் என வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் அறிவுறுத்தியுள்ளாா். மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்... மேலும் பார்க்க

தந்தையை கத்தியால் வெட்டிய மகன் கைது

வேலூா் அருகே தந்தையை கத்தியால் வெட்டிய மகனை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி காசிகுட்டையைச் சோ்ந்தவா் ஜெயபால், கட்டட மேஸ்திரி. இவரது மகன் தினகரன் எனும் தீனா (24), கூலித் தொழிலாளி. ஜெயபால... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம்

பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி வேலூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்ந... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி.... மேலும் பார்க்க