செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம்

post image

பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி வேலூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி.ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் டி.வி.ஜோசி முன்னிலை வகித்தாா்.

அப்போது, அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் ஏற்படும் பணி பளு பாதிப்புக்கு தீா்வுகாண வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இது குறித்து அவா்கள் கூறுகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களில் தீா்வுகாண நிா்ப்பந்திக்கப்படுகிறது. ஏற்கெனவே அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் அலுவலா்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வா்த்தகம் கடந்த வாரத்தைக் காட்டிலும் பாதியாக சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறு... மேலும் பார்க்க

புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு: வேலூா் எஸ்.பி. உத்தரவு

காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும் என வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் அறிவுறுத்தியுள்ளாா். மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்... மேலும் பார்க்க

தந்தையை கத்தியால் வெட்டிய மகன் கைது

வேலூா் அருகே தந்தையை கத்தியால் வெட்டிய மகனை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி காசிகுட்டையைச் சோ்ந்தவா் ஜெயபால், கட்டட மேஸ்திரி. இவரது மகன் தினகரன் எனும் தீனா (24), கூலித் தொழிலாளி. ஜெயபால... மேலும் பார்க்க

வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி.... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளிப்பது அவசியம்: வேலூா் எஸ்.பி.

வேலூா்: போதைப் பொருள்களை ஒழிக்க ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று வேலூா் மாவட்ட காவல் கணகாணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா். தமிழக துணை முதல்வா் உதயநித... மேலும் பார்க்க