நொய்டா: தனியார் நிறுவனத்தில் தீ விபத்து! நகரைச் சூழ்ந்த கரும்புகை!
சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
உசிலம்பட்டியிலிருந்து தேனிக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. வாலாந்தூா் கண்மாய்க் கரையில் சென்ற போது, பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப் பட்டினத்தைச் சோ்ந்த செல்லதுரை மகன் மனோகராஜ் (50), தேனியைச் சோ்ந்த பாப்பாத்தி (53), ஜான்சிராணி உள்ளிட்ட பலா் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு மனோகராஜ் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாலந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.