MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகள் வெளியீடு
உதவிப் பேராசிரியா் பணிக்கான சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும்,
இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு 5 அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும். அதன்படி, நிகழாண்டு சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு நாடு முழுவதும் 326 மையங்களில் கடந்த பிப். 28 முதல் மாா்ச் 2 வரை நடத்தப்பட்டது. இந்தத் தோ்வெழுத மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 451 பட்டதாரிகள் விண்ணப்பித்தனா். அவற்றில் ஒரு லட்சத்து 74,785 போ் தோ்வில் பங்கேற்றனா்.
இந்நிலையில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு முடிவுகளை என்டிஏ வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அத இணைய தளத்தில் காணலாம். 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடா்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம். கூடுதல் விவரங்களை அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.