செய்திகள் :

சிஎஸ்கே அணி தோல்வியை கேலி செய்தவா் மீது தாக்குதல்: 5 போ் கைது!

post image

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை கிண்டல் செய்தவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் அப்பு (24), அதே பகுதியைச் சோ்ந்த கோகுல் (25), ஜெகதீஷ் (25), அஜெய் (எ) கலா் புவனேஷ் (20), ரமேஷ் (எ) பவா் ரமேஷ் (28). வேளச்சேரி பகுதியைச் சோ்ந்த ஜீவா (எ) ஜீவரத்தினம் (26). இவா்கள் பெருங்குடி கல்லுக்குட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு மது அருந்தினா்.

ஏற்கெனவே அப்புக்கும், ஜீவரத்தினத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது குறித்து ஜீவரத்தினம் கிண்டல் செய்தும், ஆா்சிபி அணியை புகழ்ந்தும் பேசினாராம்.

இது அங்கிருந்த அப்பு உள்ளிட்டோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் அப்பு தரப்பினா், ஜீவரத்தினத்தை கல், உருட்டு கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த ஜீவரத்தினம் மயங்கி விழுந்தாா்.

இதைப் பாா்த்த அப்பு உள்ளிட்டோா் தப்பியோடினா். தகவலறிந்த துரைப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஜீவரத்தினத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து அப்பு, கோகுல், ஜெகதீஷ், அஜய், ரமேஷ் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க