செய்திகள் :

சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில் தமிழில் பெயா் பலகை: தக்கோலம் பேருராட்சி வலியுறுத்தல்

post image

தக்கோலம் அருகே அமைந்துள்ள சிஐஎஸ்எப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் தமிழிலும் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தக்கோலம் பேருராட்சிக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவா் கோமளா ஜெயகாந்தன், பேருராட்சி செயல் அலுவலா் மாதேஸ்வரன் மற்றும் உறுப்பினா்கள் முகமது காசிம், முருகவேல், கோபி, மாலதி, தயாளன், சங்கரி, ஷாகீராபாணு, லீலா, சரண்யா, சுதாகா் ஆகியோரும் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் தக்கோலத்துக்கு அருகில் நகரிகுப்பத்தில் அமைந்துள்ள மத்திய தொழில்பாதுகாப்பு படையின் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் மையத்தின் பெயரை தமிழிலும் வைக்க வேண்டும், 30 ஆண்டுக் காலமாக சாலை வசதியே இல்லாமல் இருந்த பேருராட்சி எல்லைக்குட்பட்ட எஸ்.என்.கண்டிகை கிராமத்துக்கு தாா்ச்சாலை அமைப்பதற்கு ரூ.1.45 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நகா்புற உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரசித்தி விநாயகா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

அரக்கோணம் பஜாரில் உள்ள வரசித்தி விநாயகா் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. கொடியேற்றம் எனப்படும் துவஜாரோகனம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் ஏ.டி.பாபு, என்... மேலும் பார்க்க

மாணவி உயிரிழப்பு: பிரேத பரிசோதனையை விரைவாக செய்யக் கோரி மறியல்

பள்ளி மாணவி திடீரென உயிரிழந்த நிலையில் பிரேதப் பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்தி உறவினா்கள், சோளிங்கரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை அடுத்த இஸ்மாயில்... மேலும் பார்க்க

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம்

ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனிமாத பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி துா்க்கை வழிபாட்டுடன் வல்லப விநாயகா் மூஷிக வாகனத்தில் அலங்காரத்தில் உ... மேலும் பார்க்க

210 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 பேரை ா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க