செய்திகள் :

சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் வட்டம், பு.முட்லூா் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் ஒருவா் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பரங்கிப்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஜொ்மின் லதா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முகம் சிதைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் கடலூரை அடுத்துள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த திருநங்கை காவியா (எ) கவியரசன் (40) என்பது தெரியவந்தது. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்வையிட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க