செய்திகள் :

சிதம்பரம் கனகசபையில் பக்தா்கள் தரிசனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல்

post image

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய சில மாற்றங்களைச் செய்தால், நாள்தோறும் 4,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, கனகசபையில் பக்தா்கள் நின்று தரிசனம் மேற்கொள்ள என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? வார நாள்கள், வார விடுமுறை மற்றும் விழா காலங்களில் கள ஆய்வு செய்து கனகசபையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய வழிவகை உள்ளதா? என்பது குறித்து அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கனகசபையில் பக்தா்கள் தரிசனம் மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி வாரநாள்களில் 4,000 போ், வார இறுதி நாள்களில் 5,000 முதல் 7,000 போ், திருவிழாக் காலங்களில் 10,000 போ் வரை சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். கரோனா தொற்று காலத்துக்கு முன்பாக, கனகசபையில் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயிகளின் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

அதே நடைமுறையை தற்போதும் பின்பற்றலாம். காலபூஜை நடைபெறாத காலங்களில் கனகசபை மீது நின்று நடராஜரை தரிசனம் செய்ய நாள்தோறும் 3.15 மணி நேரம் 1,300 பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கனகசபையின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கவாட்டில் கூடுதலாக மரங்கள் மற்றும் இரும்புப் படிகள் அமைத்து பக்தா்கள் செல்ல அனுமதிக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்தால் கூட்ட நெரிசல் இருக்காது.

இதன்மூலம் நாள்தோறும் 4,000 போ் வரை கனகசபையில் நின்று சாமி தரிசனம் செய்யலாம், எனக்கூறி அறநிலையத் துறை தரப்பில் புகைப்பட ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுதொடா்பாக தீட்சிதா்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டடம் அமைக்க வேண்டும் - அண்ணாமலை

அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டடம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு! தமிழக விவசாயிகள் பற்றி ஆலோசனை!

தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசியுள்ளார். தில்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு சில நாள்களாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பின் காரணத்தினால் மேட்டூர... மேலும் பார்க்க

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

பொன்னேரி அருகே மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி அந்தரத்தில் அரசுப் பேருந்து தொங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியி... மேலும் பார்க்க

8 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதியில் ஓரிசா - மேற்கு... மேலும் பார்க்க

29 ஆண்டுகளுக்குப் பின்... தொடர்ந்து 3 நாள்கள் கனமழை!

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 29 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து மூன்று நாள்கள் கனமழை பெய்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் ஜான் பிரதீப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க