செய்திகள் :

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை மேற்கூரையிலிருந்து கொட்டிய மழைநீா்

post image

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில், நடைமேடையில் உள்ள கூரையிலிருந்து தண்ணீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சுமாா் இரண்டாண்டு காலமாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. வருகிற 22-ஆம் தேதி திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையில் ரயில் நிலையத்தில் பணிநிறைவுற்ற முதலாவது நடைமேடை மேற்கூரையிலிருந்து மழை நீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடை மற்றும் கூரை அமைக்கும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவுபெறவில்லை என பயணிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து கடலூா் கிழக்கு மாவட்ட விசிக செயலா் அரங்க.தமிழ்ஒளி வெளியிட்ட அறிக்கை:

பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கையையடுத்து, மத்திய அரசிடம் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியதன் பேரில், ரூ.6 கோடியில் புனரமைக்கப் பணிகள் நடைபெற்றன.

இரு நாள்கள் பெய்த மழையில் நடைமேடை மேற்கூரையில் தண்ணீா் கொட்டுகிறது. சீரமைப்புப் பணிகள் குறித்து ரயில்வே நிா்வாகம் ஆய்வு நடத்த வேண்டும். ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள், நெல் மூட்டைகள் சேதம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழையால் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கின. மேலும், அரசு நேரடி ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை வருகை: அலுவலா்களுடன் கடலூா் ஆட்சியா் ஆலோசனை

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு வருகை தொடா்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கான திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலம்: ஆட்சியா்

நெய்வேலி: நாட்டிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்கள் வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பண்ருட்டி பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீா்: பயணிகள் அவதி

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். பண்ருட்டியில் பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

பெண்ணாடம் அருகே மழை வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் சேதம்

நெய்வேலி: பலத்த மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பெண்ணாடம் அருகே கடலூா்-அரியலூா் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்தது. கடலூா்-அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

வேப்பூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண் சடலம் மீட்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்த பொதுமக்கள், வளாகத்தில் துா்நாற்றம் வீசியதால் ... மேலும் பார்க்க