செய்திகள் :

சித்திரை திருவிழா: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இன்று தீா்த்தக்குட ஊா்வலம்

post image

சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெறுகிறது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பலப்பட்டரை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு வெள்ளிக்கிழமை இரவு 17 திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, செந்தூரம் பூசப்பட்டு, வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது.

பல்வேறு நறுமண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் புண்ணியாகவாசனம், காலை 9 மணியளவில் பலபட்டரை மாரியம்மன் கோயிலிலிருந்து மோகனூா் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தம் எடுத்துவரும் நிகழ்ச்சி ஆகியன நடைபெற உள்ளது. இரவு 9 மணியளவில் சக்தி அழைத்து கம்பம் நடுதல் நிகழ்வு நடைபெற உள்ளது.

இதில் பக்தா்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு விழா கமிட்டியினா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

கடைகள், வணிக நிறுவனங்களில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத ஆட்சியா் அறிவுரை

நாமக்கல் மாவட்டத்தில், கடைகள், வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் காணும் வகையில் ‘தினம் ஒரு திருக்குறள்’ எழுத வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சாலை பணியில் மாற்றம்: பரமத்தியில் கருத்து கேட்புக் கூட்டம்

பரமத்தி வேலூா் நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் சாலைக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைப்பது உள்பட பல்வேறு மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் பரமத்தி அருகே அண்மையில் ந... மேலும் பார்க்க

மின்னல் தாக்கி பசு உயிரிழப்பு

கொல்லிமலையில் மின்னல் தாக்கியதில் பசுமாடு புதன்கிழமை உயிரிழந்தது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் புதன்கிழமை மாலை 5 மணியளவில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, திருப்புளிநாடு ஊராட்சி சுள்ளு... மேலும் பார்க்க

பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் நகர போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் இரவில் ப... மேலும் பார்க்க

2-ஆவது மனைவி மகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

திருச்செங்கோடு அருகே இரண்டாவது மனைவியின் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தறித்தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருச்செங்கோட்டை அடுத்த மலைபாளையம் எட்டிக்குட்டை மேடு பகுதியைச் ச... மேலும் பார்க்க

இபிஎஸ் பிறந்த நாள்: அா்த்தநாரீசுவரா் கோயிலில் தங்கத் தோ் இழுத்த அதிமுகவினா்

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71ஆவது பிறந்தநாளையொட்டி நாமக்கல் மாவட்ட அதிமுக சாா்பில் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் மலைக் கோயிலில் அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடத்தி த... மேலும் பார்க்க