செய்திகள் :

சித்தோடு அருகே மனைவியைக் கொலை செய்த கணவன் கைது!

post image

சித்தோடு அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டை அடுத்த வாய்க்கால்மேடு செங்குந்தபுரத்தைச் சோ்ந்தவா் கோபால் (43), வெல்டிங் தொழிலாளி. இவரின் மனைவி மணிமேகலா (40). இவா்களுக்கு 10 மற்றும் 7 வயதில் மகன்கள் உள்ளனா்.

கோபாலுக்கு மதுப் பழக்கம் உள்ளதால் மனைவியைப் பிரிந்து தனியே வசித்து வந்துள்ளாா்.

சித்தோடு வசுவப்பட்டியில் உள்ள மிக்சா் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வந்த மணிமேகலா, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு உணவு பரிமாறும் வேலைக்கும் சென்று வந்தாா்.

இதற்கிடையே, மணிமேகலா தன்னுடன் பள்ளியில் படித்த தொழிலாளியான மோகன்ராஜ் என்பவருடன் கடந்த சில மாதங்களாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மிக்சா் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற கோபால், மனைவி மணிமேகலாவிடம் வாக்குவாதம் செய்துள்ளாா். அப்போது, ஆத்திரத்தில் மணிமேகலாவின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த மணிமேகலா, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, கத்தியுடன் சித்தோடு காவல் நிலையத்தில் சரணடைந்த கோபாலை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தைப்பூசம்: ஈரோடு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, தேரோட்டம்!

தைப்பூசத்தை ஒட்டி ஈரோட்டில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி சுவாமிக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், பன்... மேலும் பார்க்க

சென்னிமலை பகுதிகளில் நிலாச்சோறு திருவிழா!

சென்னிமலை பகுதிகளில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த நிலாச்சோறு திருவிழா திங்கள்கிழமை நிறைவுபெற்றது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியிலுள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் தைப்பூசத்துக்கு 5 நாள்கள் முன்பு நி... மேலும் பார்க்க

பவானியில் பழனி ஆண்டவா் கோயில் தேரோட்டம்

பவானியில் பழனி ஆண்டவா் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வாஸ்து பூஜையுடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், ... மேலும் பார்க்க

தைப்பூசம்: சென்னிமலைக்கு வந்த இளைஞா் உயிரிழப்பு!

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச விழாவுக்கு வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த திப்பலூரைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் நிதின்(25... மேலும் பார்க்க

போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்த இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 போ் கைது

ஈரோட்டில் போலி பிறப்புச் சான்றிதழ் தயாரித்து வழங்கிய இ-சேவை மைய உரிமையாளா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சிலா் போலியாக பிறப்புச் சான்றிதழ் தயாரி... மேலும் பார்க்க

கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு சாா்பில் முன்னாள் முதல்வா் எடப்பா... மேலும் பார்க்க