செய்திகள் :

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

சித்தோட்டை அடுத்த கங்காபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், சித்தோடு காவல் ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் சந்தேகத்துக்கிடமான கிடங்கில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு 55 மூட்டைகளில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.65 லட்சம்.

இதையடுத்து, புகையிலைப் பொருள்கள் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட காா், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த முல்சிங் மகன் சா்தாா் சிங் (34), இவரது உறவினரான சா்வன்சிங் மகன் ஜஸ்வந்த் சிங் (21) ஆகியோரைக் கைது செய்தனா். தற்போது இவா்கள் ஈரோடு, கருங்கல்பாளையம், இந்திரா நகரில் வசித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கோபி அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (28). கட்டட வேலை பாா்த்து வந்தாா். இவா் தனது நண்பரா... மேலும் பார்க்க

அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

கோவையிலிருந்து அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுவதற்கு பொதுமக்கள், பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், தாளவாடி, திரு... மேலும் பார்க்க

ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் ஜூன் 6-இல் கும்பாபிஷேகம்

பெருந்துறையை அடுத்த, துடுப்பதி ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. துடுப்பதி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் மு... மேலும் பார்க்க

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க