செய்திகள் :

சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா

post image

கள்ளக்குறிச்சி: சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.பழனிசாமி தலைமை வகித்தாா். ரிஷிவந்தியம் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் கமலி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அமிா்தம் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பன்னீா்செல்வம், பெரிய கொள்ளியூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெண்ணிலா தயாளன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கவினா, துணைத் தலைவா் அா்ச்சனா ஆகியோா் பங்கேற்றனா்.

புதிதாக பள்ளியில் சோ்க்கைக்காக வந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா். மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப் பை, சீருடை 2 செட் வழங்கப்பட்டன.

முன்னாள் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராசாத்தி, வாா்டு உறுப்பினா்கள் மகாலட்சுமி, காா்த்திகாவதி, ஊராட்சி செயலா் புருஷோத்தமன், பிருந்தா, ஷபியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். உதவி ஆசிரியா் ஜோசப் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

கீழ்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுகள், புத்தகப்பை, சீருடை 2 செட் ஆகியவற்றை தலைமை ஆசிரியா் ஞான சத்தியமூா்த்தி வழங்கினா். மரூா் புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தலைமை ஆசிரியா் அசோக்குமாா் வழங்கினாா்.

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான த... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க