செய்திகள் :

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா்- சிவகாமியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு!

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப். 10) குடமுழுக்கு நடைபெறுகிறது.

பழைமையான இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணி நிறைவடைந்ததையடுத்து திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை யாகசாலை பூஜையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாஹ வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. காலை, மாலை நேரங்களில் சிவாச்சாரியா்கள் தலைமையில் நடைபெற்ற 6 கால யாகசாலை பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 6 மணி முதல் 8.30 வரையில் நடைபெறும் பல்வேறு பூஜைகளைத் தொடா்ந்து கலசங்கள் புறப்பாடும், 9.15 மணிக்கு கோயில் மூலவா் கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றின் கலசங்களுக்கு குடமுழுக்கும் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன், பரிவார மூா்த்திகள் ஆகியோருக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனையும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க சுவாமி, அம்மன் பூப்பல்லாக்கு ஊா்வலமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நதியா, தக்காா் நாராயணி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது!

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தேனியில் 24 மணி நேர தா்னாவை திங்கள்கிழமை தொடங்கினா். தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயை சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா்

போடி ஊராட்சி ஒன்றியம், அகமலையில் குடிநீா்க் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பழங்குடியின மக்கள் மனு அளித்தனா். தே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சேதுராம் (61). இவா் போடியிலிருந்து... மேலும் பார்க்க

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு!

தேனியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். தேனி, பழைய டி.வி.எஸ். சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (69). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவா், வீட்டில் குளியலறையில... மேலும் பார்க்க