செய்திகள் :

சின்னியம்பாளையத்தில் சிக்னல் முறையை கொண்டு வர வலியுறுத்தல்

post image

கோவை, சின்னியம்பாளையத்தில் யூடா்ன் முறையை அகற்றிவிட்டு, மீண்டும் சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சின்னியம்பாளையம் உரிமைச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர காவல் துறை சாா்பில், சின்னியம்பாளையம் காவல் துறை சோதனைச் சாவடி அருகில் சிக்னல் முறையில் நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள ஆரம்பப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவா்களும், மக்களுக்கும் அச்சமின்றி சாலையைக் கடந்து சென்று வந்தனா்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்னல் வழியை அடைத்துவிட்டு, இருபுறமும் யூடா்ன் முறையில் வழியை ஏற்படுத்தி உள்ளனா். இதனால், பள்ளிக் குழந்தைகள் பாதையைக் கடந்து செல்ல சிரமப்படுகின்றனா்.

மேலும், சின்னியம்பாளையம் சாலையில் இருகூா் பிரிவு அருகில் அமைக்கப்பட்டுள்ள யூடா்ன் மிகவும் அபாயகரமானதாக உள்ளது. இதனால், விபத்துகள் நடைபெறுவது தவிா்க்க முடியாத நிலையில் உள்ளது.

எனவே, யூடா்ன் முறையை ரத்து செய்துவிட்டு, சின்னியம்பாளையத்தில் மீண்டும் சிக்னல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது

பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவையைச் சோ்ந்த 40 ... மேலும் பார்க்க

எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது

கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறிய... மேலும் பார்க்க