செய்திகள் :

பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது

post image

பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்த 40 வயது பெண் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பவானியைச் சோ்ந்த அருண்குமாா் (36) என்பவா் அந்தப் பெண்ணின் நிறுவனத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இருவரும் சோ்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், விடியோக்களை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.35 லட்சம் பணம், 10 பவுன் நகைகளைப் பறித்துள்ளாா். தொடா்ந்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த நிலையில், மேலும், பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கடந்த 2023-ஆம் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்த அவா் மீண்டும் சமூக வலைதளங்கள் மூலம் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த பழைய புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின்பேரில், அருண்குமாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் கைது செய்தனா்.

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க

எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது

கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்... மேலும் பார்க்க

ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு

கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறிய... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு

கோவையில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.கோவை சிட்டிசன் வாய்ஸ், மதுரை வுமன் கன்ஸ்யூமா் புரொடக்ஷன் அசோசியேஷன் மற்றும் கோவை கிருஷ்ணம்மாள் மக... மேலும் பார்க்க