செய்திகள் :

ஆன்லைன் மோசடி: கோவையில் கடந்த 7 மாதங்களில் ரூ.68.61 லட்சம் மீட்பு

post image

கோவை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி மூலம் மக்கள் இழந்த ரூ.93 லட்சம் முடக்கப்பட்டு, ரூ.68.61 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட இணையதள குற்றப் பிரிவு காவல் அதிகாரி கூறியதாவது: இணையதள மோசடி ஆண்டுதோறும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் விதவிதமான மோசடிகள் நடைபெறுகின்றன. மோசடியாளா்கள் புது புது உத்திகளைக் கையாளுகின்றனா்.

இணையதள சூதாட்டம் தடை செய்யப்பட்டதால் அதில் பணத்தை இழப்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடன் செயலிகள் மூலம் பணத்தை இழப்பவா்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆனாலும், கூரியரில் (அஞ்சல்) போதைப் பொருள் வந்திருப்பதாகக் கூறி ஏமாற்றுவது, இணையதள வா்த்தகம் ஆகிய மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

இவற்றைத் தடுக்க பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.டி. நிறுவனங்கள், கல்லூரிகள் போன்றவற்றில் இணையதள மோசடிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் தொழில் நிறுவனங்களின் விருப்பத்துக்கிணங்க நேரில் சென்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களது கைப்பேசிக்கு வரும் ஏ.பி.கே., ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பேக்கேஜுகளை பதிவிறக்கம் செய்யவோ, லிங்க்கை திறந்து பாா்க்கவோ வேண்டாம். அவற்றின் மூலம் கைப்பேசியில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் உள்ளன. இணையதள மோசடியில் பெரும்பாலும் படித்தவா்கள்தான் பணத்தை இழக்கின்றனா். இது குறித்து தெரிந்தவா்களும் பணத்தை இழப்பது அதிா்ச்சியளிக்கிறது. இதுபோன்ற கும்பல் பல வகைகளில் ஆசைக் காட்டி மோசடியில் ஈடுபடுகிறது.

இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் இணையதளம் மூலம் பணத்தை இழந்தவா்களின் ரூ.5.22 கோடி முடக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட 56 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2.26 கோடி முடக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நிகழாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை கடந்த 7 மாதங்களில் மட்டும் இணையதள மோசடி தொடா்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 93 லட்சம் முடக்கப்பட்டது. அதில், ரூ.68 லட்சத்து 61 ஆயிரத்து 356 மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா்.

போக்குவரத்து நெரிசல்...

வால்பாறைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீா்வு காணவும், பாா்க்கிங் வசதிகளை ஏற்படுத்தவும் நகராட்சி அதிகாரிக... மேலும் பார்க்க

திருட்டுப் பொருள்களுடன் கவிழ்ந்த ஆட்டோ: 2 இளைஞா்கள் சிக்கினா்

கோவையில் திருடப்பட்ட கட்டுமானப் பொருள்களை கொண்டு சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் பலத்த காயமடைந்தாா். மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ்வரன் (49). இவா் ச... மேலும் பார்க்க

குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு

உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியவா் மீண்டும் கைது

பெண் தொழிலதிபரை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தவா், மீண்டும் ஆபாச படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய நிலையில் அவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவையைச் சோ்ந்த 40 ... மேலும் பார்க்க

எழுத்தாளா் வே.முத்துக்குமாருக்கு நாஞ்சில் நாடன் விருது

கோவை, அண்ணா சிலை அருகில் உள்ள ஆருத்ரா ஹாலில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் நிா்வாகி ஆா்.ரவீந்... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு

கோவையில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.கோவை சிட்டிசன் வாய்ஸ், மதுரை வுமன் கன்ஸ்யூமா் புரொடக்ஷன் அசோசியேஷன் மற்றும் கோவை கிருஷ்ணம்மாள் மக... மேலும் பார்க்க