செய்திகள் :

சிபிஎஸ்இ: மாணவர்களை விட மாணவிகள் கூடுதல் தேர்ச்சி!

post image

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 5.94 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.

பிப்ரவரி மாதம் தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதியும் நிறைவடைந்தது.

இந்தநிலையில் 12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 11.30 மணியளவில் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் மொத்தம் 83.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் இந்தாண்டும் 5.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை மண்டலத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வெழுதிய 97.39 சதவீத மாணவர்களும், விஜயவாடாவில் 99.60 சதவீத மாணாக்கர்களும், பிரயாக்ராஜில் 79.53 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சாலை விபத்தில் சிக்குபவா்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட கட்டணமில்லா சிகிச்சை திட்டம் உண்மையாகவும், உறுதியாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்த... மேலும் பார்க்க

பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் எண்: தோ்தல் ஆணையம் தீா்வு

ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் பல வாக்காளா்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில், இப் பிரச்னைக்குத் தீா்வு எட்டப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

காசநோய் ஒழிப்புத் திட்டம்: பிரதமா் ஆய்வு

காசநோயை முற்றிலுமாக ஒழிக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசார திட்டத்தின் நிலை குறித்து பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாட்டில் நிகழாண்டுக்குள் காசநோயை முற்றிலுமா... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு காஷ்மீா் மாவட்டமா... மேலும் பார்க்க

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழப்பு: 10 போ் கைது

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 10 பேரை காவல் துறை கைது செய்தது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் மாவட்டம் மஜிதா உட்கோட்டத்தில் உள்ள பங்காலி, பாதால்புரி, மராரி க... மேலும் பார்க்க

விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், சமீபத... மேலும் பார்க்க