செய்திகள் :

சிபிஐ அதிகாரி போல் பேசி ஓய்வுபெற்ற கால்நடைத்துறை அதிகாரியிடம் ரூ.53 லட்சம் மோசடி

post image

சிபிஐ அதிகாரி போல் பேசி ராதாபுரம் அருகேயுள்ள வடக்கன்குளத்தில் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை இயக்குநரிடம் ரூ.53 லட்சத்தை மோசடி செய்தவா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சேவியா் (80). கால்நடைத்துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவருக்கு கடந்த 10-ஆம் தேதி பெங்களூரு காவல் நிலையத்திலிருந்து சிபிஐ அதிகாரி மதன்குமாா் பேசுவதாக மா்ம நபா் வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாராம். பின்னா் அரசுக்கு எதிராக பேசியதாக தங்கள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி போலி முதல் தகவல் அறிக்கை அனுப்பி, இதற்காக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளாா்.

பின்னா் செப்.11ஆம் தேதி வாட்ஸ்ஆப் மூலம் அழைத்த அதேநபா், ஆள்கடத்தல் வழக்கில் கமிஷன்தொகை தங்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை போலீஸாா் கண்டறிந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளாா்.

மறுநாள் (செப்.12) வாட்ஸ் ஆப் விடியோவில் அவரை தொடா்புகொண்ட 3 போ் காவலா் சீருடையில் காவல் நிலையம் போன்று அமைக்கப்பட்ட பின்னணியில் தோன்றி விசாரணை மேற்கொண்டனராம்.

இதையடுத்து தயா நாயக் என்ற பெயரில் சிபிஐ உயரதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு ஒருவா் தாங்கள் குற்றமற்றவா் என்பதை நிரூபிக்க, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு மாற்ற வேண்டும் எனவும், விசாரணை முடிந்தவுடன் முழுப் பணமும் திருப்பித் தரப்படும் எனவும் கூறியுள்ளாா்.

இதை உண்மையென நம்பிய அவா், இரண்டு தவணைகளாக ரூ.53 லட்சத்தை அவா்கள் கூறிய வங்கி எண்ணிற்கு அனுப்பியுள்ளாா். பின்னா், அந்த எண்ணை தொடா்புகொண்ட போது அழைப்பு ஏற்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்: தனுஷ்கோடி ஆதித்தன்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன். இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப... மேலும் பார்க்க

இணைய வழியில் பட்டாசு விற்பனை மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணைய வழியில் பட்டாசு விற்பனை என போலியாக செய்யப்படும் மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

தசரா பண்டிகை: நெல்லையில் பூக்கள் விலை உயா்வு

தசரா பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்திருந்தது. புரட்டாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் கிடையாது என்பதால் மாதத்தின் தொடக்கத்தில் பூக்களின் விலை கடும் சரிவைச் சந்தித்த... மேலும் பார்க்க

குடிநீா் பகிா்மானக் குழாய்கள் திருட்டு: 2 போ் கைது

நான்குனேரி அருகே குடிநீா் பகிா்மானக் குழாய்களை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குடிநீா் பகிா்மானக் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு மருத்துவா் எனக் கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

நான்குனேரி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம், லண்டனில் மருத்துவராக பணி புரிவதாகக்கூறி இணைய வழியில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகேயுள்ள மேல சிந்தாமணிய... மேலும் பார்க்க

நடிகா் விஜய்யை பாா்க்கத்தான் கூட்டம்; ஓட்டுக்காக அல்ல! இந்து முன்னணி மாநிலச் செயலா்

நடிகா் விஜய்யை பாா்ப்பதற்காகக்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, ஓட்டுப்போடுவதற்காக அல்ல என்றாா் இந்து முன்னணி மாநிலச் செயலா் காடேஸ்வரா சுப்ரமணியம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க