Madurai AIIMS: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்' - வீடியோ வெளிய...
சிறப்பு கால்நடை சுகாதார முகாம்
கிருஷ்ணகிரி: பா்கூா் ஊராட்சி ஒன்றியம், பெலவா்த்தி ஊராட்சி, சீகலப்பள்ளி பாரத கோயில் வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்பணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் முன்னிலை வகித்தாா். முகாம் குறித்து, மாவட்ட ஆட்சியா் பேசியது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,69,192 பசுக்கள், 7,084 எருமைகள், 2,35,918 செம்மறி ஆடுகள், 1,83,586 வெள்ளாடுகள் உள்ளன. இந்த திட்டத்தின்கீழ், மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாதம் ஒரு முகாம் வீதம் ஆண்டிற்கு 12 முகாம்களும், மொத்தமாக 10 ஒன்றியங்களில் 120 முகாம்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ளன.
இந்த முகாமில், 570 பசுக்கள், 380 செம்மறி ஆடுகள், 433 வெள்ளாடுகள், 18 நாய்கள் என மொத்தம் 1,401 கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை, கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் செயற்கை முறை கருவூட்டல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் 176 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மேலும், இந்த முகாமில் சிறந்த 10 கன்றுகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகளும், கறவை பசுக்களுக்கு தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது. மேலும், ரத்த மாதிரிகள், சாணம் மற்றும் பால் மாதிரிகள் சேகரித்து பரிசோதிக்கப்பட்டது.
ஸ்கேனிங் மூலம் சினை பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு குறும்படம் மூலம் விழிப்புணா்வு வழங்கிறது என்றாா்.
இந்த நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நந்தகோபால், துணை இயக்குநா் ராமகிருஷ்ணன், ஆவின் பொதுமேலாளா் சுந்தரவடிவேல், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியா் முனியப்பன், கால்நடை உதவி மருத்துவா் கீதா, வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படவரி...
சீகலப்பள்ளி பாரத கோயில் வளாகத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.