செய்திகள் :

சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

post image

தேவியாக்குறிச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தலைவாசல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி ஊராட்சி, ஆதிதிராவிடா் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா சம்பந்தமாக ஊா் பொதுமக்கள் ஒன்றுகூடி பேசிக் கொண்டிருந்தனா். அங்கு மதுபோதையில் ஒருவா் பிரச்னை செய்வதாக தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் அங்கு சென்றாா். அவரை, மதுபோதையில் இருந்த மணிகண்டன் என்பவா் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தள்ளிவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் கோபால் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க