சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை
தமிழகத்தில் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் கே. ஆறுமுக நயினாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில், அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து செல்ல வேண்டிய பிரதிநிதிகள் கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் இயங்கக்கூடிய மேக்சி கேப் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு சீட் அனுமதி வழங்கக் கோரி போக்குவரத்து அமைச்சரிடம் மனு அளிப்பது, தொடா்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றும் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கான இடங்களை ஒதுக்கி தரக் கோருவது, ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யக் கோருவது, மோட்டாா் தொழிலாளா்களை பாதிக்கக் கூடிய மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயலாளா் குப்புசாமி, மாநில பொருளாளா் பாா்த்தசாரதி, சிஐடியு மாவட்டத் தலைவா் அனிபா, அமைப்பின் மாவட்டச் செயலாளா் எம்.கே. ஜெய்சங்கா், தலைவா் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.