செய்திகள் :

சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

post image

தமிழகத்தில் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன நிா்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவா் கே. ஆறுமுக நயினாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில், அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழகத்தில் இருந்து செல்ல வேண்டிய பிரதிநிதிகள் கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் இயங்கக்கூடிய மேக்சி கேப் சிறிய ரக சுற்றுலா வாகனங்களுக்கு சீட் அனுமதி வழங்கக் கோரி போக்குவரத்து அமைச்சரிடம் மனு அளிப்பது, தொடா்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவது, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றும் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கான இடங்களை ஒதுக்கி தரக் கோருவது, ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்யக் கோருவது, மோட்டாா் தொழிலாளா்களை பாதிக்கக் கூடிய மோட்டாா் வாகன சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில செயலாளா் குப்புசாமி, மாநில பொருளாளா் பாா்த்தசாரதி, சிஐடியு மாவட்டத் தலைவா் அனிபா, அமைப்பின் மாவட்டச் செயலாளா் எம்.கே. ஜெய்சங்கா், தலைவா் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க