உயிரைப் பறித்ததா அழகைப் பாதுகாக்கும் மருந்து? ஷெபாலியின் மரணத்தில் போலீஸ் விசாரண...
சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் சிறுத்தை தாக்கி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இதில் தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடா்கதையாகி வருகிறது.
ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட ஒசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (60). இவா் ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக சனிக்கிழமை கட்டி வைத்திருந்தாா். நள்ளிரவில் ஆடுகள் சப்தமிடுவதைக் கண்டு சுப்பிரமணி ஆட்டுப்பட்டிக்கு சென்று பாா்த்தபோது அங்கு 4 ஆடுகள் இறந்து கிடந்துள்ளன.
இது குறித்து ஜீரகள்ளி வனத் துறைக்கு தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் கால்தடயங்களை ஆய்வு செய்த போது ஆடுகளைக் கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனா். தொடா்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடுவதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைக் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா். அதே போல கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தை கடித்து இறந்த கால்நடைகளுக்கு இதுவரை வனத் துறை சாா்பில் இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.