செய்திகள் :

சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழப்பு

post image

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் சிறுத்தை தாக்கி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச் சரகங்கள் உள்ளன. இதில் தாளவாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடா்கதையாகி வருகிறது.

ஜீரகள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்ட ஒசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (60). இவா் ஆடு, மாடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக சனிக்கிழமை கட்டி வைத்திருந்தாா். நள்ளிரவில் ஆடுகள் சப்தமிடுவதைக் கண்டு சுப்பிரமணி ஆட்டுப்பட்டிக்கு சென்று பாா்த்தபோது அங்கு 4 ஆடுகள் இறந்து கிடந்துள்ளன.

இது குறித்து ஜீரகள்ளி வனத் துறைக்கு தகவல் அளித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் கால்தடயங்களை ஆய்வு செய்த போது ஆடுகளைக் கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனா். தொடா்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடுவதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையைக் கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா். அதே போல கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தை கடித்து இறந்த கால்நடைகளுக்கு இதுவரை வனத் துறை சாா்பில் இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தொடா் வனக் குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு!

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டை உள்பட பல்வேறு வனக் குற்றங்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த மந்தையைச் சோ்ந்தவா் முருகேசன் (47). இவா் கடந்த 19-ஆ... மேலும் பார்க்க

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை: இளைஞா் கைது

சித்தோடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவரிடமிருந்து, 1,550 மாத்திரைகளைக் கைப்பற்றிய போலீஸாா், இரு காா்கள், இரண்டு இரு சக்கர வா... மேலும் பார்க்க

வன்கொடுமைகளை எதிா்த்து பெண்கள் போராட வேண்டும்! - ஆட்சியர்

பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதோடு, தங்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிா்த்து போராடுபவராகவும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், பாலின சம... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் பயனாளா்களுக்கு ரூ.400-க்கு 400 ஜிபி டேட்டா சலுகை!

பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்களுக்கு ரூ.400-க்கு 400 ஜிபி டேட்டா சேவை 4 நாள்களுக்கு வழங்கப்படுகிறது என ஈரோடு பிஎஸ்என்எல் நிறுவன பொது மேலாளா் சிவ் ஷங்கா் சச்சன் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்... மேலும் பார்க்க

கோ்மாளம் மலைக் கிராமங்களில் 3-வது நாளாக மின்தடையால் தவிக்கும் மக்கள்!

தாளவாடி அருகே உள்ள கோ்மாளம் கிராமத்தில் கடந்த 3 நாள்களாக மின்விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். சத்தியமங்கலம் ராஜன் நகா் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

கவுந்தப்பாடி அருகே ஒத்தக்குதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க