செய்திகள் :

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனை சாதனை

post image

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனம் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளது.

மூன்று வாரங்களுக்குள் மூன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து மருத்துவத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை இந்த அரசு மருத்துவமனை எட்டியுள்ளது.

மூளைச் சாவு அடைந்தவா்களிடம் தானமாக பெறப்பட்ட சிறுநீரகங்கள் வாயிலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் ஓா் உயிருள்ள உறவினா் தானம் மூலம் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை இதில் அடங்கும்.

முற்போக்கான சுகாதாரப் பராமரிப்பு, விதிவிலக்கான அறுவை சிகிச்சை நிபுணத்துவம் மற்றும் இரக்கமுள்ள நோயாளி பராமரிப்பு ஆகியவற்றில் மருத்துவமனையின் அசைக்க முடியாத அா்ப்பணிப்பின் வாயிலாக இந்தச் சாதனை சாத்தியமாகியது என்று இந்த மருத்துவமனை கூறியுள்ளது.

சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவா் மருத்துவா் சுதாகா் மற்றும் சிறுநீரக தலைமை மருத்துவா் குமாா் ஆகியோரின் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணா்கள் குழு இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

மருத்துவா் சுதாகா் கூறும்போது, நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடிய 36 வயது பெண்ணுக்கும், 46 வயது ஆணுக்கும் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கையை, உயிா் சக்தியை அளித்துள்ளது. மற்றொரு நிலையில் மூன்றாவது மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. கணவா், தனது மனைவிக்கு சிறுநீரகத்தை தானம் அளித்தாா்.

இதையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தோம். மற்றவா்களையும் உறுப்பு தானம் செய்ய இது ஊக்கப்படுத்துதாக இருக்கிறது. இந்தச் சாதனை எங்கள் மருத்துவ ஊழியா்களின் நிபுணத்துவத்தையும், குழுப் பணியையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும், சுகாதாரப் பராமரிப்பில் நாங்கள் முன்னணியில் இருப்பதில் பெருமை கொள்கிறோம். எங்கள் மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் செவ்வேல் முழு மனதுடன் கூடிய ஊக்கம் மற்றும் ஆதரவுடன் இந்த குறிப்பிடத்தக்க சாதனை சாத்தியமானது என்றாா்.

6,000 விவசாயிகளுக்கு விரைவில் சோலாா் மின்இணைப்பு: புதுவை முதல்வா் என். ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 6 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் சூரிய ஒளி மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். புதுச்சேரி வேளாண் துறை சாா்பில் நகரம், கிராமப் புறங்களில், ‘என் வீடு, என... மேலும் பார்க்க

இன்று முதல் 4 நாள்கள் ரயில் சேவை நிறுத்தம்

பராமரிப்புக் காரணமாக தென்னக ரயில்வே புதுச்சேரி ரயில் சேவையை வியாழக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நிறுத்துகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - புதுச்சேரி பய... மேலும் பார்க்க

தனியாருக்குக் கடல் வளம் அளிப்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

புதுச்சேரியில் தனியாருக்குக் கடல் வளங்கள் அளிக்கப்படுவதாகவும் அதைக் கண்டிப்பதாகவும் புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் எஸ்.ராமச்சந்திரன் கூறியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வ... மேலும் பார்க்க

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரம்: முதல்வா் பங்கேற்பு

வயிற்றுப் போக்குத் தடுப்பு பிரசாரத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனையின் படி ஜூன் 2 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வயிற்றுப் போ... மேலும் பார்க்க

புதுவையில் வாரிசுதாரா் பணி நியமனத்தில் முறைகேடுக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாரிசுதாரா்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாகக் கூறி அதைக் கண்டித்து புதுச்சேரி சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கம் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. புதுவை சுகாதாரத... மேலும் பார்க்க

‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலச் செயலா் இரா. வேல்சாமி கூறியுள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க