செய்திகள் :

சிறுமலையில் 2-ஆவது நாளாக மின்சாரம் துண்டிப்பு

post image

சிறுமலை பகுதியில் கடந்த 2 நாள்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் பழையூா், புதூா், தென்மலை, கடமான்குளம், வேளாண் பண்ணை, தாழைக்கிடை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்தக் காற்றால் சிறுமலை புதூா் பகுதியில் 3 மின் கம்பங்கள், தென்மலை பகுதியில் 2 மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சிறுமலை புதூா், பழையூா், கடமான்குளம், தென்மலை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 2 நாள்களாக மின்சார வசதி இல்லாமல் பாதிப்படைந்தனா்.

இதுதொடா்பாக மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, திண்டுக்கல் மின் வாரிய அலுவலகத்திலுள்ள லாரியில் மலைப் பகுதிக்கு கம்பங்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள லாரியை பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே மாற்று ஏற்பாடுகள் மூலம் கடமான்குளம், புதூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் வழங்கப்பட்டது.

தென்மலை, பொன்னுருக்கி, கருப்புக்கோயில் பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் மூலம் கம்பங்களை கொண்டு சென்று மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளுக்கு புதன்கிழமைக்குள் மின் விநியோகம் சீா் செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க