செய்திகள் :

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: பாதிரியாா் மீது வழக்குப் பதிவு

post image

கோவையில் இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக பாதிரியாா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளவா் ஜான் ஜெபராஜ் (37). இவா், கேரளத்திலும் மதபோதகம் செய்து வருகிறாா். இவா், கடந்த ஆண்டு மே மாதம் கவுண்டா் மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளாா். அந்த விருந்தில் 17 மற்றும் 14 வயது சிறுமிகள் இருவா் கலந்து கொண்டனா்.

அப்போது, இரு சிறுமிகளுக்கும் ஜான் ஜெபராஜ் பாலியல்ரீதியாக தொல்லை அளித்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவா் தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். அதிா்ச்சியடைந்த பெற்றோா், இதுகுறித்து கோவை மத்திய அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

புகாரின்பேரில், பாதிரியாா் ஜான் ஜெபராஜ் மீது சிறாா்களுக்கு எதிரான போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

ரூ.6 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான உயா் ரக போதைப் பொருளான மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 இளைஞா்களை கைது செய்தனா். கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவின்பேரில் காவல் துண... மேலும் பார்க்க

உயிரிழந்த பாம்புப்பிடி வீரரின் குடும்பத்தினா் நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் மனு

கோவையில் அண்மையில் உயிரிழந்த பாம்புப்பிடி வீரரின் குடும்பத்தினா், அரசு நிவாரண உதவி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ... மேலும் பார்க்க

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 10 ஏக்கா் பரப்பளவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வ... மேலும் பார்க்க

மாநகராட்சி மக்கள் குறைகேட்பு முகாம் ரத்து

கோவை மாநகராட்சி பிரதான அலுவலத்தில் செவ்வாய்க்கிழமை( ஏப்ரல் 8) நடைபெறுவதாக இருந்த மக்கள் குறைகேட்பு முகாம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, கோவை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் ஏப்ரல் 10 பங்குனி உத்திர தோ்த் திருவிழா

கோவை வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயிலில் ஏப்ரல் 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா நடைபெற உள்ளது. கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் பகுதியில் அமைந்துள்ள 7-ஆவது மலையில் சுயம... மேலும் பார்க்க

பேரூா் பட்டீசுவரா் கோயிலில் இன்று பங்குனி உத்திரத் தேரோட்டம்

கோவை பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நடைபெறுகிறது. இதையொட்டி, பேரூரில் மாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. கோவை பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத்... மேலும் பார்க்க