இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் ஜீவா (24). இவா் 2023, ஜூன் 30 ஆம் தேதி எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினா் கொடுத்த புகாரின் பேரில், தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஜீவாவை கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து ஜீவாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ. 6 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.