செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்ஸோவில் சிறுவன் உள்பட இருவா் கைது

post image

நாகை அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

வேளாங்கண்ணி அருகேயுள்ள பெரியதும்பூரைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (18) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சோ்த்தனா். சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, நாகை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்னேஸ்வரன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுமிக்கு சமூக நலத்துறை சாா்பாக மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

நாகை: கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் ஜூலை 2-இல் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 7-ஆவது சுற்று தடுப்பூசி முகாம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய கால்ந... மேலும் பார்க்க

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க

நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ப... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

கீழ்வேளூரில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் பிரைம் கல்வியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்... மேலும் பார்க்க

திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது - அமைச்சா் கே.என். நேரு

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றால், 25 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாது என்று கட்சியின் முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேர... மேலும் பார்க்க