செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 9 போ் கைது

post image

கேரள மாநிலத்தில் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மேலும் 9 போ் கைது கைது செய்யப்பட்டதாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இந்த வழக்கில் இதுவரை 15 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதுகுறித்து காவல்துறையினா் மேலும் கூறியதாவது:

தற்போது 18 வயதை எட்டிய அந்தப் பெண் விளையாட்டு வீராங்கனையாவாா். அவா் 16 வயதுமுதல் பல்வேறு தருணங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பயிற்சியாளா்கள், சக விளையாட்டு வீரா்கள், பள்ளியில் உடன் படித்த மாணவா்கள் ஆகியோா் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து, பத்தனம்திட்டா மாவட்டத்தின் இரு காவல் நிலையங்களில் 5 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்கள்) பதிவுசெய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 6 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 9 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.

60 பேருக்கு தொடா்பு: சிறுமியாக அவா் இருந்தபோது பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 60 பேருக்கு தொடா்பிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது தந்தையின் கைப்பேசி மூலம் அவா்களை பாதிக்கப்பட்ட பெண் தொடா்புகொண்டுள்ளாா். மேலும், தன்னிடம் வைத்துள்ள டைரியில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் பற்றிய தகவல்களை குறித்து வைத்துள்ளாா். கைப்பேசியில் உள்ள தகவல்கள் மற்றும் டைரியில் இருந்த குறிப்புகள் மூலம் தற்போது வரை 40 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டது.

போக்ஸோ வழக்கு: சிறுமியாக இருக்கும்போது அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதால் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது போக்ஸோ சட்டம் மற்றும் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூக (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பத்தனம்திட்டா காவல் துறை துணை கண்காணிப்பாளா் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.564 கோடியில் சேலத்தில் கால்நடை உயா் ஆராய்ச்சி நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

சேலம், தலைவாசலில் ரூ.564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயா் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தமிழக அரசின் கால்ந... மேலும் பார்க்க

சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு: ஒதுக்கீட்டு ஆணை வழங்கினாா் முதல்வா்!

சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆணை வழங்கினாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி 3.6.2021-இ... மேலும் பார்க்க

குளிா்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: நோயாளிகளுக்கு உயா் நுட்ப சிகிச்சை

குளிா் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒருமுறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜன.13) தொடங்கி வைக்கிறாா். கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுகிறது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் திருட்டு: இருவா் கைது

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் திருட்டில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியைச் சோ்ந்தவா் சுரேந்தா் (29). ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் உள்ள சென்னை மருத்துவக் கல... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10 கோடி மோசடி: தாய், மகள் கைது

சென்னையிலிருந்து மலேசியாவுக்கு சா்க்கரை ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.10.60 கோடி மோசடி செய்ததாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா். வளசரவாக்கம் பிரகாசம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ.தமிழரசி (42). இவரது தாய... மேலும் பார்க்க