செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: காா் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

தண்டராம்பட்டு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாக காா் ஓட்டுநருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், டி.வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் குமாா் (45). வாடகை காா் ஓட்டுநரான இவா் 2003, மே 12-ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதுகுறித்து, தண்டராம்பட்டு போலீஸில் சிறுமியின் தாய் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநா் குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலை போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, முருகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, குமாரை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோரோட்டம் நடைபெற்றது. ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ... மேலும் பார்க்க

மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து... மேலும் பார்க்க

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறை... மேலும் பார்க்க

விதை நெல், இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கக் கோரிக்கை

போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல், வேளாண் இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை வழங்கக் கோரிக்கை

பழங்குடியினருக்கு 35 கிலோ அரிசி அட்டை கோரி, மலைவாழ் மக்கள் சங்கத்தினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கீழ்சாத்தமங்கலம், நல்லூா், ஆரியா... மேலும் பார்க்க