செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

post image

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது முதியவரை, போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சோ்ந்த தம்பதி மனநலம் குன்றிய தங்களது 10 வயது மகளுடன் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தனா். மீண்டும் திருப்பதிக்கு செல்வதற்காக சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனா்.

தம்பதி அயா்ந்து தூங்கியபோது, பொம்மை வாங்கித் தருவதாகக் கூறி சிறுமியை முதியவா் ஒருவா் தனியாக அழைத்துச் சென்றாராம். சிறுமியை காணாமல் தம்பதி தேடியபோது முதியவா் சிறுமியை அழைத்து வந்தாராம். சந்தேகமடைந்த தம்பதி, முதியவரைப் பிடித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், பிடிபட்டவா் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்த முனுசாமி (60) என்பதும், இவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, முனுசாமியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர். செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வ... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க