செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

post image

கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் குருகிராம் நீதிமன்றம் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு கூடுதல் அமா்வு நீதிபதி அஸ்வனி குமாா் ரூ.40,000 அபராதமும் விதித்துள்ளது. பிப்ரவரி 17, 2021 அன்று ஒரு நபா் தனது 16 வயது மகள் காணாமல் போனதாக புகாா் அளித்தாா். டிஎல்எஃப் பேஸ்-1 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. தேடுதலுக்குப் பிறகு சிறுமி கண்டுபிடிக்கப்பட்டாா். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா்.

பின்னா், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவுகளும் எஃப்ஐஆரில் சோ்க்கப்பட்டது. இதையடுத்து, உத்தரபிரதேசத்தின் ஹாா்டோய் மாவட்டத்தைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஃபுா்கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். இந்த வழக்கை போலீஸாா் முழுமையாக விசாரித்து, தேவையான அனைத்து ஆதாரங்களையும் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, காவல்துறையினரால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் சனிக்கிழமை 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது என்று குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

ரோஹிணியில் தெரு குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 200-க்கும் மேற்பட்டோா் கைது

வடமேற்கு தில்லியின் ரோஹிணியில் ஒரு மாத கால நடவடிக்கையில் கலால், சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் மற்றும் தெரு குற்றங்களுக்காக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

தில்லியில் மழைக் காலத்திற்கு முன்பு குழிகள் இல்லாத சாலைகள்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

மழைக்காலம் நகரத்திற்கு வருவதற்கு முன்பு தில்லி அரசு குழிகள் இல்லாத சாலைகளை உறுதி செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். மதுபன் சௌக் முதல் முகா்பா சௌக் வரையிலான வெளிப்புற ரிங் ரோடு பகுதியில் ஞாய... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிக+ாரி ஒருவா் தெரிவித்தாா். சாஸ்திரி பூங்கா மீன் சந்தை அருகே... மேலும் பார்க்க

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க