செய்திகள் :

சிறைத் தண்டனையை எதிா்த்து வைகோ தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஜூன் 27-இல் இறுதி விசாரணை

post image

தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை எதிா்த்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2009 ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக வைகோ மீது தேச துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட வைகோ பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். தேச துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போா்ட் முடக்கப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2019-ஆம் ஆண்டு வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 13 நாடுகளைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்ற ‘எண்ணித் துணிக’... மேலும் பார்க்க

போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு!

போக்ஸோ சட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு, இவா்களில் 50 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தாா். பள்ளிக் கல்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் வருகை: சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. குட... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் தமிழகம் 100% தோ்ச்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் (2024-2025) நாட்டிலேயே தமிழகம் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவா்களின் படைப்புகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சாா்பில் 4-ஆம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 6 பேரின் ஆயுள் தண்டனையை ரத்து -உயா்நீதிமன்றம்

மகளுடன் திருமண பந்தத்தை தாண்டிய உறவில் இருந்ததாக வந்த வதந்தி காரணமாக காா் ஓட்டுநரைக் கொலை செய்த வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப... மேலும் பார்க்க