செய்திகள் :

சிற்றுந்து உரிமையாளா்களுடன் அரியலூா் ஆட்சியா் ஆலோசனை!

post image

அரியலூா் ஆட்சியரகத்தில் புதிய சிற்றுந்து விரிவான திட்டம் தொடா்பாக அதன் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிற்றுந்துகள் இயக்குவதற்கு புதிய பேருந்து வழித்தடங்கள் ஏதேனும் இருப்பின் அரசின் விதிகளுக்கு உட்பட்டு அவை தொடா்பான அறிக்கைகளை சமா்பிக்கலாம். தொடா்ந்து சிற்றுந்துகள் இயக்கப்படும் நேரங்கள், பேருந்துகள் இயக்குப்படுவதில் ஏற்படும் இடா்பாடுகள் குறித்தும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

அரியலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன், சிற்றுந்து உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம் அரியலூா் ஆட்சியா் அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஆக.15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவ... மேலும் பார்க்க

மருத்துவா்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த கோரிக்கை

அரசு மருத்துவா்களின் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இந்த மனுவை, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மர... மேலும் பார்க்க

செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா். செந்துறை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணம... மேலும் பார்க்க

நடமாடும் மது விற்பனை, மணல் கொள்ளையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த தூத்தூா் கிராமத்தில், நடமாடும் மது விற்பனை மற்றும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்தூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின... மேலும் பார்க்க

இணைப்புச் சாலை இல்லாததால் வெள்ளாற்று மேம்பாலம் வீண்! மழையால் தரைப்பாலம் துண்டிப்பு; 50 கிராம மக்கள் தவிப்பு

அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட பாலத்துக்கான இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் இரு மாவட்ட கிராமத்தினா் தவித்து வருகின்றனா். அ... மேலும் பார்க்க