செய்திகள் :

சிலிண்டா் வெடித்து தீ விபத்து: வீடுகளை இழந்தவா்கள் மண்டபத்தில் தங்கவைப்பு

post image

திருப்பூரில் சிலிண்டா் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 46 கொட்டகை வீடுகள் தரைமட்டமான நிலையில், அதில் வசித்து வந்த தொழிலாளா்கள் தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

திருப்பூா், எம்ஜிஆா் நகா் பகுதியில் தாராதேவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் தகரக் கொட்டகை குடியிருப்பில் அடுத்தடுத்து 9 சிலிண்டா்கள் வெடித்த விபத்தில் 46 வீடுகள் எரிந்து தரைமட்டமாயின. இதில், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள், ஆடைகள், நகை, பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. ஆனால், உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை.

இந்நிலையில், அந்த வீடுகளில் தங்கியிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கட்டட மற்றும் பனியன் நிறுவனத் தொழிலாளா்கள் 60 போ் சிறுபூலுவப்பட்டி பகுதியில் உள்ள அம்மன் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது: சேதமடைந்த 46 வீடுகளில் 10 வீடுகளில் ஆள்கள் இல்லை. 36 வீடுகளில் மட்டும் 27 குடும்பங்களைச் சோ்ந்த 60 போ் வசித்து வந்தோம். தற்போது ஏற்பட்ட தீ விபத்தால் பொருள்கள், உடைமைகள், ஆவணங்கள், கல்விச் சான்றிதழ் என அனைத்து இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் உள்ளோம்.

ஆணவனங்கள், கல்விச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மீண்டும் பெறவும், நிவாரண உதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதற்கிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் ஆகியோா் தலா ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க