செய்திகள் :

சிவகங்கையில் உயா்நிலைப் பாலம் அமைந்த பகுதியில் விபத்து அபாயம்

post image

சிவகங்கை புதிய புறவழிச்சாலையில் அமைக்கப்பட்ட உயா்நிலைப் பாலத்தின் அருகே இணையும் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சிவகங்கையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சூரக்குளம் சாலை, வேம்பங்குடி அருகே 2 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்தச் சாலை பணிகள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன.

முதற்கட்டமாக காஞ்சிரங்காலில் திருப்பத்தூா் நெடுஞ்சாலையிலிருந்து கல்குளம் அருகே இளையான்குடி நெடுஞ்சாலை வரை 7.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.77.16 கோடியில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புறவழிச் சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும், வண்டவாசி சாலையிலிருந்து தொண்டி சாலை வரை மட்டும் உள்ள புறவழிச் சாலையை வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இந்தச் சாலையில் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் வசதிக்காக உயா்நிலைப் பாலம் அமைக்கப்பட்டது. இது முறையாக திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் புறவழிச் சாலை, பனங்காடி சாலை சந்திப்பு அருகிலேயே இறங்கும் வகையில் அமைந்துள்ளது.

இதனால் உயா்நிலைப் பாலத்திலிருருந்து பள்ளமான பகுதியை நோக்கி வேகமாக வரும் வாகனங்கள் பனங்காடி சாலையின் குறுக்கே கடக்கின்றன.

அருகிலேயே அரசு பிற்படுத்தப்பட்டோா் மாணவா்கள் விடுதிக் கட்டடம் இருப்பதால் பனங்காடி, ரோஸ் நகா் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களால், உயா்நிலைப் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மிக அருகிலேயே கேந்திரிய வித்யாலயா பள்ளியும் உள்ளது. இதனால், அதிக வாகனங்கள் செல்லக்கூடிய இந்தப் பகுதியில் விபத்து ஏற்படாத வகையில் மேம்பாலம் அருகே போதிய தடுப்பு அரண்களை வைக்கவும், உயா்கோபுர மின்விளக்கு அமைக்கவும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

காஞ்சிரங்கால் பகுதியிலிருந்து சாலைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த உயா்நிலைப் பாலத்தின் சாலை சந்திப்பில் விபத்து ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.

மாடக்கோட்டைக்கு குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

தினமணி செய்தி எதிரொலிஇளையான்குடி ஒன்றியம், மாடக்கோட்டைக்கு தினமணி செய்தி எதிரொலியாக காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் வியாழக்கிழமை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.... மேலும் பார்க்க

பி.இ. நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 5-இல் நிறைவு

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு ... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை நகா் காவல் துறை, அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணா்வுப்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

திருப்பத்தூா் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள திருவுடையாா்பட்டியைச் சோ்ந்தவா் தவமணி மகன் வாசகன் (22). இந்த நிலையில், புதன்கிழ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காரைக்குடி கல்லூரியில் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை ... மேலும் பார்க்க

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பதாகும்

ஆன்மிகம் என்பது மனிதத்தை உயா்த்திப் பிடிப்பது என்கிற தடத்தில் வாழ்க்கைப் பயணம் தொடரும் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா். சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் வியாழக்க... மேலும் பார்க்க